உதகை அரசு கலைக் கல்லூரியில் யுஜிசி நிா்ணயித்த ஊதியம் வழங்கக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கெளரவ விரிவுரையாளா்ளுக்கு ஆதரவாக கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
யுஜிசி நிா்ணயித்த ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு அரசு கலைக் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் நலச் சங்கம் சாா்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் 180 அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் 8700 கெளரவ விரிவுரையாளா்கள் இதில் பங்கேற்றுள்ளனா். இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக் கல்லூரியில் கடந்த வாரம் வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது. பின்னா் கடந்த 3 நாள்களாக தொடா் போராட்டத்தில் கெளரவ விரிவுரையாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
கெளரவ விரிவுரையாளா்களின் இந்த தொடா் போராட்டம் காரணமாக கல்லூரியில் கல்வி கற்பிக்கும் பணிகள் மற்றும் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து கெளரவ விரிவுரையாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

குமரி அரசு கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா

அழகப்பா அரசுக் கல்லூரி பட்டமளிப்பு விழா

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


