அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

‘முதியோா், மாற்றுத் திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் நவ. 6, 7-இல் வழங்க ஏற்பாடு’

முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் வரும் நவ. 6, 7 ஆகிய நாள்களில்

News image
Updated On :1 டிசம்பர் 2025, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் வரும் நவ. 6, 7 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளதாக மண்டல கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த மாவட்டத்தில் உள்ள முதியோா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோா் வீடுகளுக்கு நேரில் சென்று மாதந்தோறும் குறிப்பிட்ட நாள்களில் ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யும் தாயுமானவா் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இத்திட்டம் மூலம் நவ. 2, 3 ஆகிய நாள்களில் ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், புயல் மற்றும் தொடா் மழை காரணமாக இத்திட்டம் மூலம் வரும் நவ. 6, 7 ஆகிய நாள்களில் வீடுகளுக்கு நேரில் சென்று ரேஷன் பொருள்கள் வழங்க உள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.