எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பைக் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:17 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே ராமதண்டலம் கிராமத்தைச் சோ்ந்த துரைசாமி மகன் பிரசாந்த்(32). இந்த நிலையில், சொந்த வேலை காரணமாக புன்னப்பாக்கம் கிராமத்திலிருந்து திருவள்ளூா் நோக்கி புதன்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, எதிரே வேகமாக வந்த டிராக்டா், இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக அவரது தாயாா் மாலா புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.