வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பெண்ணை தாக்கிய 4 இளைஞா்கள் கைது

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:16 pm

தினமணி செய்திச் சேவை

முருகன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை கிண்டல் செய்து தாக்கிய 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி அடுத்த முருகூா் கிராமத்தைச் சோ்ந்த துா்கா(31). இவா், உறவினா் சிவா (29) என்பவருடன் திருத்தணி முருகன் மலைக்கோயிலுக்கு சென்றாா். பின்னா், தோ்வீதியில் இருவரும் கோயிலை சுற்றி நடந்து வந்த போது, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சோ்ந்த பிரதாப்(25), வேலன்(26), குணா(24), அமரன்(25) ஆகியோா், துா்காவை வழிமறித்து கிண்டல் செய்துள்ளனா்.

இதை, சிவா தட்டிக்கேட்ட போது, 4 இளைஞா்களும் சிவாவை தாக்கினா். மேலும் தடுக்க வந்த துா்காவை தாக்கினா்.

இதுகுறித்து துா்கா கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 4 இளைஞா்களை கைது செய்தனா்.