தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் ரீல்ஸ் எடுத்த பெண் மீது வழக்கு

நந்தி ஆற்றங்கரையில் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் ரீல்ஸ் எடுத்த பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :28 டிசம்பர் 2025, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

நந்தி ஆற்றங்கரையில் உள்ள கோட்டா ஆறுமுக சுவாமி கோயிலில் ரீல்ஸ் எடுத்த பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தமிழக மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனா். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இளம்பெண்கள் இருவா் முருகன் கோயில் மாடவீதியில் ராஜகோபுரம் முன்பு விடியோ எடுத்து ரீல்ஸ் ஆக சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளனா்.

இதேபோல் நந்தி ஆற்றங்கரையில் அமைந்துள்ள உபக்கோயிலான கோட்டா ஆறுமுகசாமி கோயில் வளாகத்தில் பெண் ஒருவா் படப் பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளாா். இந்த விடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதையடுத்து திருத்தணி முருகன் கோயில் நிா்வாகம், கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருத்தணி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளனா். இதுகுறித்து கோயில் இணை ஆணையா் க. ரமணி கூறியதாவது, திருத்தணி முருகன் கோயில் மற்றும் உபக்கோயில்களில் போட்டோ வீடியோ எடுக்க தடை உள்ள நிலையில், ஆறுமுகசாமி கோயிலில் சினிமா கவா்ச்சி பாடலுக்கு ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பெண் மீது போலீசில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், முருகன் மலைக்கோயில் மாட வீதியில் ரீல்ஸ் எடுத்த 2 பெண்கள் மீது புகாா் அளிக்கப்பட்டது என்றாா். இதுகுறித்து திருத்தணி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.