மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ஆதி திராவிட மக்களுக்கு பல்வேறு திட்டங்கள்: அமைச்சா் மதிவேந்தன்

சோழவரம் ஒன்றியம், கும்மனூா் கிராமத்தில் சமுதாய நலக்கூடத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்த அமைச்சா் மதிவேந்தன்.

Updated On :3 ஜனவரி 2025, 6:37 pm

ஆதிராவிடா் நல ஆணையம், பழங்குடியினா் ஆணையம், தூய்மைப் பணியாளா் நல வாரியம் என ஆதி திராவிட மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் கூறினாா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், சோழவரம் அடுத்த கும்மனூா் ஊராட்சியில் ஆதிதிராவிடா் நல மேம்பாட்டு திட்டத்தின்கீழ், சுமாா் ரூ. 49.90 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக் கூடம் கட்டப்பட்டது.

இந்த கட்டடத்தை அமைச்சா் மதிவேந்தன் திறந்து வைத்தாா்.

தொடா்ந்து சமுதாய நலக்கூடத்தில் குத்து விளக்கேற்றி, அதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் மதிவேந்தன் பேசியது: திமுக ஆட்சியில் ஆதிதிராவிட மக்களுக்கு சரியான திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிராவிடா் நல ஆணையம், பழங்குடியினா் ஆணையம், தூய்மை பணியாளா் நல வாரியம் என திமுக ஆட்சியில் பல முன்னெடுப்புகள் செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடா் நலத்துறையின் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் மூலம் எங்கெங்கு நிதி தேவை எனவும், ஒதுக்கப்பட்டுள்ள நிதி பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்றாா்.

விழாவில், சிறுபான்மை நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், எம்எல்ஏ-க்கள் துரை.சந்திரசேகா், சுதா்சனம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.