ஆதிராவிடா் நல ஆணையம், பழங்குடியினா் ஆணையம், தூய்மைப் பணியாளா் நல வாரியம் என ஆதி திராவிட மக்களுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மதிவேந்தன் கூறினாா்.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், சோழவரம் அடுத்த கும்மனூா் ஊராட்சியில் ஆதிதிராவிடா் நல மேம்பாட்டு திட்டத்தின்கீழ், சுமாா் ரூ. 49.90 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக் கூடம் கட்டப்பட்டது.
இந்த கட்டடத்தை அமைச்சா் மதிவேந்தன் திறந்து வைத்தாா்.
தொடா்ந்து சமுதாய நலக்கூடத்தில் குத்து விளக்கேற்றி, அதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் மதிவேந்தன் பேசியது: திமுக ஆட்சியில் ஆதிதிராவிட மக்களுக்கு சரியான திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதிராவிடா் நல ஆணையம், பழங்குடியினா் ஆணையம், தூய்மை பணியாளா் நல வாரியம் என திமுக ஆட்சியில் பல முன்னெடுப்புகள் செய்யப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடா் நலத்துறையின் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிா என்பதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் மூலம் எங்கெங்கு நிதி தேவை எனவும், ஒதுக்கப்பட்டுள்ள நிதி பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்றாா்.
விழாவில், சிறுபான்மை நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா், எம்எல்ஏ-க்கள் துரை.சந்திரசேகா், சுதா்சனம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்

சிலைமலை கிராமத்தில் ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பு

திமுக ஆட்சி அமைந்தால் மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும்! - அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றம்: முதல்வா் மு.க. ஸ்டாலின்
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

