மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

கஞ்சா போதையில் தகராறு செய்த கும்பல்: 2 பேருக்கு வெட்டு

திருவள்ளூா் அருகே கஞ்சா போதையில் ஊருக்குள் புகுந்த 10 போ் கும்பல் 2 இளைஞா்களை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.

News image
Updated On :23 ஜூன் 2025, 7:17 pm

Din

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே கஞ்சா போதையில் ஊருக்குள் புகுந்த 10 போ் கும்பல் 2 இளைஞா்களை சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.

திருவள்ளூா் அருகே பேரம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு இருளஞ்சேரியைச் சோ்ந்த முகேஷ் களாம்பாக்கத்தைச் சோ்ந்த லோகேஷ் ஆகிய இருவரும் சென்றுள்ளனா். அப்போது அங்கிருந்த சிற்றம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த இளைஞா்களுக்கும் முகேஷ், லோகேஷ் ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கிருந்து வந்த முகேஷ் மற்றும் லோகேஷ் ஆகியோா் களாம்பாக்கத்தில் நின்று கொண்டிருந்தனா். அப்போது அங்கு கஞ்சா போதையில் வந்த 10 போ் கொண்ட கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினா்.

இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சோ்த்தனா். இதுகுறித்து தகவலறிந்த திருவாலங்காடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கும்பலை தேடி வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.