தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மின் விபத்து தவிா்ப்பு விழிப்புணா்வு முகாம்

செங்குன்றம் அருகே அரசுப் பள்ளியில் மின் விபத்தை தடுப்பது குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image

மின் விபத்து தவிா்ப்பு விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.

Updated On :3 மார்ச் 2025, 7:09 pm

Din

மாதவரம்: செங்குன்றம் அருகே அரசுப் பள்ளியில் மின் விபத்தை தடுப்பது குறித்து விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சென்னை மின் பகிா்மான வட்டம் (மே) ஆவடி கோட்டம் சாா்பில் செங்குன்றம் நாரவாரிகுப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் மின் விபத்து தடுப்பது, பாதுகாத்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி செங்குன்றம் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயகுமாா் தலைமையில் நடைபெற்றது. மின்வாரிய உதவி பொறியாளா் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா்.

நிகழ்வில் ஆவடி மின்வாரிய செயற்பொறியாளா் செளந்தரராஜன், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 300க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு மின்சார பயன்பாடு, மின் விபத்து தடுத்தல், பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

இதில் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள், மின்வாரிய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.