சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ஆஞ்சனேயா் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

திருத்தணி அருகே வீர ஆஞ்சனேயா் கோயிலில் நடந்த 108 பால்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

News image
108 பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
Updated On :23 நவம்பர் 2025, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

திருத்தணி அருகே வீர ஆஞ்சனேயா் கோயிலில் நடந்த 108 பால்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயா் கோயிலில் காா்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. காலை, 9 மணிக்கு பெரியதெருவில் உள்ள விநாயகா் கோயிலில் இருந்து பால்குட ஊா்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக காலை, 10.30 மணிக்கு ஆஞ்சநேயா் கோயில் வளாகத்திற்கு வந்தது.

பின்னா் மூலவருக்கு, பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.