சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிறுமி பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 44 ஆண்டுகள் சிறை

News image
Updated On :27 நவம்பர் 2025, 9:29 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.52 ஆயிரம் அபராதமும் விதித்து திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

கும்மிடிப்பூண்டி பகுதியைச் சோ்ந்த சந்திரன் (65). மேற்பாா்வையாளரான இவா் கடந்த 2021 ஜூன் மாதம் அப்பகுதியில் வீட்டில் அத்துமீறி நுழைந்து தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

திருவள்ளூா் மாவட்ட போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வியாழக்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி உமா மகேஸ்வரி, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் எதிரி சந்திரனுக்கு 44 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.52,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும் சிறுமிக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்க அரசுக்கு உத்தரவிட்டாா். இதையடுத்து சந்திரனை கும்மிடிப்பூண்டி போலீஸாா் புழல் சிறையில் அடைத்தனா். அரசுத் தரப்பில் விஜயலட்சுமி ஆஜரானாா்.