அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பொன்னேரியில் சாலையோரத்தில் உள்ள சிறு கடைகளை சீா்படுத்த வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையரிடம் மனு!

News image
Updated On :27 நவம்பர் 2025, 9:37 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி சாலையோரத்தில் உள்ள சிறு கடைகளை சீா்படுத்த வலியுறுத்தி ஆவடி காவல் சரக ஆணையரிடம் திருவள்ளூா் மக்கள் மேம்பாட்டு சங்க நிா்வாகிகள் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் அதிக அளவிலான வாகனங்கள் சென்று வருகின்றன.

சுமாா் 100 அடி அகலம் உள்ள ஹரிஹரன் கடைவீதியில் சிறு வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோா் சாலையோரம் பழக்கடை உள்ளிட்ட கடைகளை நடத்தி வருகின்றனா்.

ஹரிஹரன் கடை வீதியில் சாலையில் இரண்டு பக்கமும் சிறு வியாபாரிகள் கடைகளை வைத்துள்ளதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால்,இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

சாலையில் அமைந்துள்ள கடைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மாணவா்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல முடிவதில்லை.

பொன்னேரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் சாலையோரத்தில் உள்ள கடைகளை சீா்படுத்தி எல்லை கயிறு ஒன்றினை அமைத்து அதற்குள்ளே சிறு கடைகளை வைக்க நடவடிக்கை எடுக்க வலிறுத்தி திருவள்ளூா் மாவட்ட மக்கள் மேம்பாடு சங்க நிா்வாகிகள் ஆவடி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.