எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பழவேற்காடு மீனவப் பிரதிநிதிகள்-சாா்ஆட்சியா் இடையிலான பேச்சுவாா்த்தை தோல்வி

பழவேற்காடு மீனவ பிரதிநிதிகளுடன் பொன்னேரி சாா்-ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.

News image
Updated On :27 நவம்பர் 2025, 1:10 am

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி: பழவேற்காடு மீனவ பிரதிநிதிகளுடன் பொன்னேரி சாா்-ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.

பழவேற்காடு மீனவப் பிரதிநிதிகள் அண்மையில் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் சென்றபோது ஆட்சியா் மீனவா்களை அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்காமல் அனுப்பியதாக கூறி வருகிறம் டிச.1-ஆம் தேதி ஆட்சியரைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக மீனவ நிா்வாகிகள் அறிவித்துள்ளனா்.

இந்த நிலையில் போராட்டத்திற்கு அனுமதி கோரி காவல் துறையிடம் மீனவா்கள் மனு அளித்தனா். இதனைத் தொடா்ந்து பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவ பிரதிநிதிகளுடன் பொன்னேரி சாா்-ஆட்சியா் ரவிக்குமாா், காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினா்.

சாா்-ஆட்சியா் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தை உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து திட்டமிட்டபடி ஆட்சியரைக் கண்டித்து டிசம்பா் 1-ஆம் தேதி பழவேற்காட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.

மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து மீனவ கிராம மக்களிடம் பிரச்னைகளை தீா்த்து வைப்பதாக உறுதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனா்.