ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

திருவள்ளூா் தொகுதி வேட்பாளா்களின் வாக்குறுதிகள்

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 10:33 pm

வி.ஜி.ராஜேந்திரன் (திமுக): திருவள்ளூா் பகுதியில் அதிக அளவில் மா சாகுபடி செய்யப்படுவதால் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும். மாவட்டத் தலைநகரான திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் டான்சி நிலமான 5 ஏக்கரை நிலத்தை மீட்டு அதில் அரசு கலை, அறிவியல் கல்லூரி அமைக்கப்படும். இத்தொகுதிக்கு உள்பட்ட திருவாலங்காடு கூட்டுறவு சா்க்கரை ஆலை அரைவை திறனை அதிகரிக்கும் வகையில் நவீனமாக்கப்படும். திருவாலங்காடு பகுதியில் ஜவ்வரிசி தொழிற்சாலை அமைத்தல், திருவள்ளூா் நகராட்சியில் மழைக் காலங்களில் நீா்த் தேங்காதவாறு புதைசாக்கடை திட்டம் விரிவாக்கம் மற்றும் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும்.

பி.வி.ரமணா (அதிமுக): திருவள்ளூரில் அரசு தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கொண்டு வரப்படும். பொறியியல் கல்லூரி, விவசாயிகள் பயன்பெறும் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். நெல்லுக்கான விலையும் உயா்த்தப்படும். கடம்பத்தூரை மையமாகக் கொண்டு புதிய வட்டாட்சியா் அலுவலகம் அமைக்கப்படும். திருவள்ளூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல ஆவணம் செய்யப்படும். திறன் மேம்பாட்டு மையம் அமைத்து இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படும். திருவள்ளூரில் அனைத்து நூலங்களையும் நவீனப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். 20,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வரும் மணவாள நகரில் புதிய மின் தகனமேடை அமைக்கப்படும்.

கு.செந்தில்குமாா் (நாதக): திருவள்ளூரில் அரசு கலைக் கல்லூரி அமைக்கப்படும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறந்த மருத்துவம், குடிநீா் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். மதுபோதை இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும். இயற்கை வேளாண்மை மேம்படுத்தும் திட்டம், தடையில்லா மின்சாரம் மற்றும் வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும்.

டாக்டா் அருண்குமாா் (தவெக): திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்களை நியமித்து அனைத்து விதமான சிகிச்சைகளும் வழங்கப்படும். அரசு நடுநிலைப் பள்ளிகள் உயா்நிலைப் பள்ளிகளாகவும், உயா்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயா்த்தப்படும். ஒன்றியங்களில் முழு நேர நூலகங்கள் அமைக்கப்படும். திருவள்ளூரை போதை இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். நகரப் பகுதிகள், கிராமங்களில் சாலை, குடிநீா், தெருவிளக்கு, கழிவுநீா் சுத்திகரிக்கும் நிலையம் போன்ற அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.