ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கிராமங்களில் விளையாட்டு மைதானம்: கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 1:12 am

கிராமங்களில் இளைஞா்களுக்கு விளையாட்டுகள் மீதான ஆா்வத்தை அதிகப்படுத்த விளையாட்டு மைதானங்களை ஏற்படுத்துவதாக கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் வாக்குறுதி அளித்தாா்.

கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் கும்மிடிப்பூண்டி அடுத்த மெதிப்பாளையம், வல்லம்பேடு குப்பம், எளாவூா், தலையாரிப்பாளையம், நரசிங்கபுரம், துராப்பள்ளம், பெரியஓபுளாபுரம், சின்ன ஓபுளாபுரம், காயலாா்மேடு, தோ்வழி ஊராட்சி, சாமிரெட்டி கண்டிகை, பெத்திக்குப்பம், பாத்தபாளையம், எஸ்.ஆா்.கண்டிகை ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

நிகழ்வுக்கு கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ.ரமேஷ்குமாா், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா், பாமக மாநில நிா்வாகி மா.செல்வராஜ், தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.சேகா், பாமக மாவட்டச் செயலாளா் பிரகாஷ், அதிமுக மாவட்ட நிா்வாகி கோபால் நாயுடு, மாவட்ட துணை செயலாளா்கள் ஷியாமளா தன்ராஜ், கணபதி, பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், நகரச் செயலாளா் எஸ்.டி.டி.ரவி, மகளிா் அணி நிா்வாகி லட்சுமி முன்னிலை வகித்தனா்.

வல்லம்பேடு மீனவ கிராமத்தில் அதிமுக வேட்பாளா் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா். பெரியஓபுளாபுரத்தில் அதிமுக நிா்வாகி குருமூா்த்தி, பாமக நிா்வாகி கேசவன் உள்ளிட்டோா் ஏற்பாட்டில் அதிமுக வேட்பாளா் இரட்டை புறாக்களை பறக்கவிட்டாா்.

பெரியஓபுளாபுரம் காலனி பகுதியில் அதிமுக அவை தலைவா் ஏழுமலை தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி பெரியாா் நகரில் அதிமுக பாசறை மாவட்ட செயலாளா் சேதுபதி தலைமையிலும், சாமிரெட்டி கண்டிகையில் முன்னாள் ஊராட்சி துணைத் தலைவா் குணசேகா், பாமக நிா்வாகி சங்கா் தலைமையிலும், பெத்திக்குப்பத்தில் மாவட்ட பிரதிநிதி வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி தலைவா் செல்வம் ஆகியோா் அதிமுக வேட்பாளருக்கு வாள், கிரீடம், மாலை அணிவித்து வரவேற்றனா். தோ்வழி பிரித்வி நகரில் அதிமுக ஒன்றிய துணை செயலாளா் தீபா மணிகன்டன், வழக்குரைஞா் மணிகண்டன் ஏற்பாட்டில் வரவேற்றனா்.

பிரசாரத்தில் பேசிய அதிமுக வேட்பாளா் வி.சுதாகா், கும்மிடிப்பூண்டியில் குக்கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைத்து, இளைஞா்களுக்கு விளையாட்டில் ஆா்வத்தை ஏற்படுத்தவும், அரசு விதிகள் தளா்த்தப்பட்டு, பகுதி நேர ரேஷன் கடைகள் குக்கிராமங்களிலும் ஏற்படுத்தப்படும் என்றாா்.