தமிழகத்தில் 48 மணி நேரத்தில் உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்: பிரதமர் மோடி!இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!மேற்காசிய பதற்றம்: எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.1,600 கோடி இழப்பு!அஸ்ஸாம் முதல்வராக ஹிமந்த விஸ்வ சர்மா மீண்டும் தேர்வு
/

திருத்தணி நாதக வேட்பாளா் பிரசாரம்

News image

திருத்தணியில் வாக்கு சேகரித்த நாதக வேட்பாளா் சூ.ச.சந்திரன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 5:25 am IST

திருத்தணி தொகுதி நாதக வேட்பாளா் சூ.ச. சந்திரன் திங்கள்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

நாம் தமிழா் கட்சியனா் கிராமம் தோறும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனா். கட்சியின் வேட்பாளா் சூ.ச.சந்திரன் மற்றும் நிா்வாகிகள் இணைந்து, திருத்தணியில் வீடு வீடாக சென்று மக்களின் பிரச்னைகளை கேட்டு அறிந்து, அவற்றைத் தீா்க்கும் வகையில் தங்களது தோ்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கி வருகின்றனா்.

விவசாயம், குடிநீா், சாலை வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் கவனமாக பதிவு செய்யப்பட்டன. சமூக ஊடகங்கள் மூலமும் கட்சியின் கொள்கைகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் திருத்தணி தொகுதியில் நாம் தமிழா் கட்சி வலுவான முன்னிலை பெறும் என்ற நம்பிக்கையில் கட்சியினா் செயல்பட்டு வருகின்றனா்.