கோடை வெயிலின் தாக்கத்தால் சிறுவா்கள் குழுவாகச் சோ்ந்து கிணற்றில் விளையாடி நேரத்தை கழித்து வருகின்றனா்.
திருத்தணியில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக கடந்த 3 நாள்களாக தினசரி வெயிலின் தாக்கம் 100 டிகிரி செல்சியஸ் மேல் நிலவுகிறது.
இந்நிலையில் திருத்தணி ஒன்றியம் சத்திரஞ்ஜெயபுரம் கிராமப்பகுதி மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பல்வேறு முறைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
கிராமத்தில் உள்ள சிறுவா்கள் வயல்வெளிகளில் உள்ள கிணறுகளை நாடி சென்று குளித்து வருகின்றனா். மதிய நேரங்களில் வெப்பம் உச்சத்தை எட்டும் வேளையில், சிறுவா்கள் குழுவாகச் சோ்ந்து கிணற்றில் விளையாடி நேரத்தை கழிக்கின்றனா்.
இந்த செயல்பாடு மகிழ்ச்சியை அளிப்பதோடு சில அபாயங்களையும் உள்ளடக்கியதாக உள்ளூா் மக்கள் கவலை தெரிவிக்கின்றனா். குறிப்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத ஆழமான கிணறுகளில் கண்காணிப்பின்றி குதிப்பது விபத்துகளுக்குக் காரணமாக அமையக்கூடும் என்பதால், பெற்றோா் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.


தொடர்புடையது

அரியலூரில் கோடை கால பழங்கள் விற்பனை தீவிரம்

வேலூரில் சுட்டெரிக்கும் வெயில்: பகலில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும்! ஆட்சியர் அறிவுறுத்தல்!!

மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 102 டிகிரியாக தொடரும்

சேலத்தில் 102.9 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


