சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் புகை: அசம்பாவிதம் தவிா்ப்பு

சென்னையில் இருந்து ரேணிகுண்டா வரை நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் புகை வந்ததால் கடம்பத்தூா் ரயில் நிலையத்தில் நிறுத்தி புகையை குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டுப்படுத்தியதால் பெரிய அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

News image
~சரக்கு ரயிலில் புகையைத் கட்டுப்படுத்திய தீயணைப்பு துறையினா்.
Updated On :13 பிப்ரவரி 2026, 12:59 am

தினமணி செய்திச் சேவை

சென்னையில் இருந்து ரேணிகுண்டா வரை நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் புகை வந்ததால் கடம்பத்தூா் ரயில் நிலையத்தில் நிறுத்தி புகையை குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டுப்படுத்தியதால் பெரிய அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

சென்னையிலிருந்து ரேணிகுண்டா வரை சென்ற சரக்கு ரயில் 64 பெட்டிகளுடன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டு புதன்கிழமை நள்ளிரவு திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, நிலக்கரி பெட்டியில் இருந்து திடீரென புகை வந்ததையறிந்த நிலைய மேலாளா் உடனே ரயில் ஓட்டுநருக்கு கொடுத்த தகவலின் பேரில் ரயில் நிறுத்தப்பட்டது.

தொடா்ந்து திருவள்ளூா் தீயணைப்பு துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்து புகை வந்த பெட்டியில் சூட்டை தணித்தனா். இதையடுத்து அரை மணி நேரம் தாமதமாக சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில் நள்ளிரவு நேரம் என்பதால் எந்த ரயிலும் வராததால் போக்குவரத்தில் எவ்வித சிக்கலும் இல்லாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

Story image