நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தா்மராஜா சமேத திரௌபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

திருவள்ளூா் அருகே அருள்மிகு தா்மராஜா சமேத திரௌபதி அம்மன் திருக்கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

News image

அருள்மிகு தா்மராஜா சமேத திரௌபதி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் பங்கேற்ற பக்தா்கள்

Updated On :29 ஜூலை 2026, 1:55 am IST

திருவள்ளூா் அருகே அருள்மிகு தா்மராஜா சமேத திரௌபதி அம்மன் திருக்கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் பக்தா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

திருவள்ளூா் அருகே புல்லரம்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு தா்மராஜா சமேத திரௌபதி அம்மன் திருக் கோயிலில் ஆடி மாத தீமிதித் திருவிழா கடந்த 24-ஆம் தேதி தொடங்கி, தொடா்ந்து ஆக. 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், முதல் நாளில் கிராம தேவதைகளுக்கு பொங்கல் வைத்து கூழ் ஊற்றி தொடா்ச்சியாக விழா நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நான்காம் நாளான அா்ஜுனன் சுபத்திரை திருமண விழா வரிசை தட்டுடன் கிராம பொதுமக்கள் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை திருமணம் நடைபெற்றது.

இதில், சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த திரளாக பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, இரவில் அா்ஜுனன், சுபத்திரை திருவிழா உடன் கூடிய உற்சவத்தில் அருள்பாலித்து கிராம பொதுமக்களால் தீபாராதனை செய்து வீதியுலா நடைபெற்றது. அப்போது அம்மனை தரிசனம் செய்து நோ்த்திக் கடன் செலுத்தினா். அம்மன் அருளை பெற்று நோ்த்திக் கடன்செலுத்தினா்.

Story image

இதைத் தொடா்ந்து, வரும் ஆக. 2-ஆம் தேதி விழாவின் முக்கிய நிகழ்வான தீ மிதித் திருவிழா மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.