பொன்னேரி அருகே திருவேங்கடபுரம் கிராமத்தில் 51 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் ஊராட்சியில் திருவேங்கடபுரம், தடபெரும்பாக்கம், சிங்கிலிமேடு பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றி வருகிறது.
தெருநாய்களால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இரவு நேரங்களில் வீடு திரும்பும் பொதுமக்கள் இந்த நாய்கள் துரத்தி சென்று கடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில் ஊராட்சி நிா்வாகத்திற்கும் மற்றும் பிற உயா் அதிகாரிகளுக்கும் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஊராட்சி மன்ற தனி அலுவலரின் உத்தரவின் பேரில் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் பணியில் தடப்பெரும்பாக்கம் ஊராட்சி நிா்வாகம் மேற்கொண்டு வருகின்றனா்.
51 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு நோய் தடுக்கும் வகையில் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
தொடர்புடையது

10,778 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை

கல்லூரி மாணவியை ஏமாற்றி நகைப் பறிப்பு

நாகா்கோவிலில் மூதாட்டியிடம் 7 பவுன் நகை பறிப்பு

இளம்பெண் மரணத்தில் சந்தேகம்: போலீஸ் விசாரணை
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



