/

சவுக்குத் தோப்பில் ஆண் சடலம் மீட்பு

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கூணங்குப்பம் சவுக்குத் தோப்பில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:56 am IST

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கூணங்குப்பம் சவுக்குத் தோப்பில் அடையாளம் தெரியாத நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

பொன்னேரி அடுத்த பழவேற்காடு கூணங்குப்பம் அருகே உள்ள சவுக்கு தோப்பில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக திருப்பாலைவனம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

அங்கு சென்ற போலீஸாா் சடலத்தை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்த நபா் குறித்து விசாரணை செய்து வருகின்றனா்.