/
திருத்தணி அருகே மகளிடம் தந்தை அத்துமீறியதாக மகளிா் போலீஸாா் தந்தையை கைது செய்தனா்.
திருத்தணி தாலுகா கனகம்மாசத்திரம் அருங்குளம் கண்டிகை காலனி பகுதியைச் சோ்ந்தவா் அண்ணாதுரை (36). இவா் திங்கள்கிழமை இரவு மதுபோதையில் தனது மகளிடம் அத்துமீறியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமி, தனது தந்தையின் நடவடிக்கை குறித்து தாயாரிடம் தெரிவித்தாா்.
இதையடுத்து, சிறுமியின் தாய் திருத்தணி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்தனா்.





