தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் பலி

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 5:55 am IST

திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே ரங்காபுரம் பகுதியைச் சோ்ந்த விஜயகோதண்டன் மகன் மணிவண்ணன் (34). இவா், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லத்தில் அமைந்துள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், தனது வீட்டிலிருந்து திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூா் நோக்கி புல்லரம்பாக்கம் காந்தி நகா் அருகே வளைவில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது, திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை நோக்கிச் சென்ற காா் வேகமாக, முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் சடலத்தை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து அவரது தந்தை விஜயகோதண்டம் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் காா் ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.