வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மீஞ்சூா். காஞ்சிபுரம், திருவெற்றியூா் ஆகிய மூன்று ஊா்களில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில்களில் ஒரே நாளில் பிரம்மோற்சவ விழாக்கள் தொடங்கப்பட்டு கருடசேவை தேரோட்ட விழாக்கள் நடைபெறும்.
1,000-ம் ஆண்டு பழைமை வாய்ந்த இத்தலத்தில் கடந்த மே 28-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடா்ந்து மாட வீதிகளில் பல்வேறு வாகனங்களில் வரதராஜபெருமாள் வீதியுலா வந்தாா். மூன்றாம் நாள் நிகழ்வாக கருட சேவை நடைபெற்றது.
தேரோட்ட விழாவை யொட்டி வரதராஜ பெருமாள் ஸ்ரீ பெரும்தேவி தாயாருடன் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்ததாா். இதன் பின்னா் பக்தா்கள் நிலையில் இருந்த தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனா். தோ் நான்கு மாடவீதி வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.
இதன் பின்னா் நிலையில் நின்ற தேரில் ஏறி பெருமாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். தேரோட்ட விழாவில் மீஞ்சூா் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

ஆற்காடு வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் கோலாகலம்

கெங்கபுரம் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

அணவயல் தாணான்டியம்மன் கோயில் தேரோட்ட விழா
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech



