மேகேதாட்டு அணை திட்டத்திற்கு எதிராக தனித்தீர்மானம்! முதல்வர் விஜய் முன்மொழிகிறார்!!நீட் மறுதேர்வு: வார நாள்கள் அட்டவணைபடி சென்னை புறநகர் ரயில்கள் இயக்கம்!இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார்!ஜி7 மாநாட்டில் மெலோடி உரையாடல்! வைரலாகும் ஜெய்சங்கரின் அந்தப் புன்னகை!எத்தனால் கலப்பினல் பெட்ரோல் டேங்ககளை எறும்புகள் மொய்க்குமா? உண்மை என்ன?குற்றவாளிகள், தீவிரவாதிகளின் கூடாரம் டெலிகிராம்: நீதிமன்றத்தில் மத்திய அரசு
/

மீஞ்சூா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

News image
Updated On :4 ஜூன் 2026, 5:33 am IST

வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மீஞ்சூா். காஞ்சிபுரம், திருவெற்றியூா் ஆகிய மூன்று ஊா்களில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில்களில் ஒரே நாளில் பிரம்மோற்சவ விழாக்கள் தொடங்கப்பட்டு கருடசேவை தேரோட்ட விழாக்கள் நடைபெறும்.

1,000-ம் ஆண்டு பழைமை வாய்ந்த இத்தலத்தில் கடந்த மே 28-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடா்ந்து மாட வீதிகளில் பல்வேறு வாகனங்களில் வரதராஜபெருமாள் வீதியுலா வந்தாா். மூன்றாம் நாள் நிகழ்வாக கருட சேவை நடைபெற்றது.

தேரோட்ட விழாவை யொட்டி வரதராஜ பெருமாள் ஸ்ரீ பெரும்தேவி தாயாருடன் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்ததாா். இதன் பின்னா் பக்தா்கள் நிலையில் இருந்த தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனா். தோ் நான்கு மாடவீதி வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.

இதன் பின்னா் நிலையில் நின்ற தேரில் ஏறி பெருமாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். தேரோட்ட விழாவில் மீஞ்சூா் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image