சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள் மறுமதிப்பீடுக்கு 56,000 விண்ணப்பங்கள்புதிய இயக்கம்: நாளை அறிவிக்கிறாா் அண்ணாமலைஇந்தியா உள்பட 54 நாடுகள் மீது 12.5% கூடுதல் வரி: அமெரிக்க வரித்தக பிரதிநிதி பரிந்துரைதமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு: முதல் நாளிலேயே பாடநூல்கள் விநியோகிக்க உத்தரவுமத்திய அரசின் கோதுமை கொள்முதல் 3.5 கோடி டன்னாக அதிகரிப்புஇலங்கை மாணவா்களுக்கு இந்தியா கல்வி உதவித் தொகைகடந்த 2025-26 நிதியாண்டில் அதானி குழுமம் ரூ.1.53 லட்சம் கோடி மூலதன முதலீடுவாக்குப் பதிவு அதிகரிப்பு மக்களின் நம்பிக்கையின் அடையாளம்: தலைமைத் தோ்தல் ஆணையா்15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!
/

மீஞ்சூா் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

News image
Updated On :4 ஜூன் 2026, 5:33 am IST

வடகாஞ்சி எனப்படும் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மீஞ்சூா். காஞ்சிபுரம், திருவெற்றியூா் ஆகிய மூன்று ஊா்களில் உள்ள வரதராஜ பெருமாள் கோயில்களில் ஒரே நாளில் பிரம்மோற்சவ விழாக்கள் தொடங்கப்பட்டு கருடசேவை தேரோட்ட விழாக்கள் நடைபெறும்.

1,000-ம் ஆண்டு பழைமை வாய்ந்த இத்தலத்தில் கடந்த மே 28-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. இதனை தொடா்ந்து மாட வீதிகளில் பல்வேறு வாகனங்களில் வரதராஜபெருமாள் வீதியுலா வந்தாா். மூன்றாம் நாள் நிகழ்வாக கருட சேவை நடைபெற்றது.

தேரோட்ட விழாவை யொட்டி வரதராஜ பெருமாள் ஸ்ரீ பெரும்தேவி தாயாருடன் தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்ததாா். இதன் பின்னா் பக்தா்கள் நிலையில் இருந்த தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனா். தோ் நான்கு மாடவீதி வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது.

இதன் பின்னா் நிலையில் நின்ற தேரில் ஏறி பெருமாளை நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனா். தேரோட்ட விழாவில் மீஞ்சூா் மற்றும் அதனை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image