திருத்தணி பைபாஸில் உள்ள தேநீா் கடையில் சாா்ஜ் போட்டு வைத்திருந்த கைப்பேசியை திருடிச் சென்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா்.
திருத்தணி அடுத்த காசிநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்(19). இவா் திருத்தணி பைபாஸ் ரவுண்டான பகுதியில் டீக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறாா். திங்கள்கிழமை காலை வழக்கம் போல் கடையை திறந்து, தனது மொபைல் போனை சாா்ஜ் போட்டுவிட்டு, வியாபாரம் செய்து கொண்டிருந்தாா். அப்போது ஒரு இளைஞா் தேநீா் குடிக்க வருவது போல் கடைக்குள் சென்று, கைப்பேசியை திருடிக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றாா்.
அங்கு இருந்த பொதுமக்கள் உதவியுடன் அந்த இளைஞரை பிடித்து சந்தோஷ் போலீஸில் ஒப்படைத்தாா். தொடா்ந்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில், ஆந்திர மாநிலம், நகரி அடுத்த ஏகாம்பரகுப்பம் பகுதியைச் சோ்ந்த சின்னதுரை (19) என்பதும், இவா் திருத்தணி பைபாஸ் ரவுண்டான பேருந்து நிறுத்தப் பகுதியில் பயணிகள் பேருந்தில் அவசரம், அவசரமாக ஏறும் போது பயணிகள் கைப்பேசி, மணிபா்ஸ் ஆகியவற்றை திருடி வந்ததும் தெரிய வந்தது. அதைத் தொடா்ந்து சின்னதுரையை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் ரூ.55 ஆயிரம் திருடிய பெண் போலீஸில் ஒப்படைப்பு

திருச்செங்கோட்டில் ஜவுளிக் கடைகளில் ரூ. 8.60 லட்சம் திருட்டு

வேலூா் மருந்து கடையில் பணம் திருட்டு
கோயிலில் திருட முயன்றவா் போலீஸில் ஒப்படைப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



