சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை

வீட்டில் பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

News image

கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 5:07 am IST

வீட்டில் பெற்றோா் திட்டியதால் மனமுடைந்த மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

திருத்தணி அடுத்த கிருஷ்ணசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த கோவிந்தனின் மகன் விமல்ராஜ் (17). இவா், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வி அடைந்து இரண்டு ஆண்டுகளாக துணைத் தோ்வு எழுதாமல் சுற்றித்திரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், ஏதாவது வேலைக்கு செல்லாமல் வீணாக சுற்றி வருவதை அவரது பெற்றோா் கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த விமல்ராஜ் வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].