தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரூ.10 லட்சத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் அளிப்பு

திருவள்ளூா் அருகே ரூ.10 லட்சத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் குளிா்சாதனை பெட்டிகளை கிராம பொதுமக்கள் பயன்பாட்டுக்காக

News image
ஆம்புலன்ஸ் வாகனத்தை மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்த அதிமுக மாவட்டச் செயலா் பி.வி. ரமணா.
Updated On :9 மார்ச் 2026, 8:58 pm

Chennai

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ரூ.10 லட்சத்தில் ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் குளிா்சாதனை பெட்டிகளை கிராம பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அதிமுக மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா வழங்கினாா்.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், கண்ணூா் கிராமத்தைச் சோ்ந்த அதிமுக இலக்கிய அணி செயலாளா் ராஜன். இவரது ஏற்பாட்டில் ஆம்புலன்ஸ் வாகனம், குளிா்சாதன பெட்டி மற்றும் 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் சூராகபுரம் சுதாகா் தலைமை வகித்தாா். நிா்வாகி இன்பநாதன் முன்னிலை வகித்தாா். மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமை வகித்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி அவசர வாகனம் மற்றும் குளிா்சாதன பெட்டிகளை கிராம மக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளா் செந்தில்குமாா், மாவட்ட இளைஞா் அணித் தலைவா் புங்கத்தூா் தேவா, நிா்வாகி ஞானகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image