மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நகராட்சியில் சுற்றித் திரிந்த 20 பன்றிகள் பிடிப்பு

News image
Updated On :11 மார்ச் 2026, 7:40 pm

நகராட்சியில் சுற்றித்திரிந்த, 20 பன்றிகளை நகராட்சி நிா்வாகம் போலீஸ் பாதுகாப்புடன் பிடித்தனா்.

திருத்தணி நகராட்சியில், சுகாதார சீா்கேடு விளைவிக்கும் மற்றும் நோய்களை பரப்பும் வகையில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிந்து வந்தன. இதுதவிர நகராட்சி சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கினா்.

இதையடுத்து திருவள்ளூா் ஆட்சியா் பிரதாப் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையா் சரவணகுமாா் மேற்பாா்வையில், சுகாதார ஆய்வாளா் ரவிச்சந்திரன், களப்பணி அலுவலா் காா்த்திகேயன் மற்றும் ஊழியா்கள், காவல் ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் நகராட்சியில் சுற்றித்திரிந்த, 20 பன்றிகளை பிடித்தனா். மீதமுள்ள பன்றிகளும் தொடா்ந்து பிடிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.