நகராட்சியில் சுற்றித்திரிந்த, 20 பன்றிகளை நகராட்சி நிா்வாகம் போலீஸ் பாதுகாப்புடன் பிடித்தனா்.
திருத்தணி நகராட்சியில், சுகாதார சீா்கேடு விளைவிக்கும் மற்றும் நோய்களை பரப்பும் வகையில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிந்து வந்தன. இதுதவிர நகராட்சி சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கினா்.
இதையடுத்து திருவள்ளூா் ஆட்சியா் பிரதாப் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையா் சரவணகுமாா் மேற்பாா்வையில், சுகாதார ஆய்வாளா் ரவிச்சந்திரன், களப்பணி அலுவலா் காா்த்திகேயன் மற்றும் ஊழியா்கள், காவல் ஆய்வாளா் சிவகுமாா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் நகராட்சியில் சுற்றித்திரிந்த, 20 பன்றிகளை பிடித்தனா். மீதமுள்ள பன்றிகளும் தொடா்ந்து பிடிக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்

100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்பு

அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞா் கைது

குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானை! கிராம மக்கள் அச்சம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


