மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இணையவழி மின்கட்டணம், புதிய மின் இணைப்புக்கான பதிவு சேவைகள்: இன்றும், நாளையும் தற்காலிமாக நிறுத்தி வைப்பு

புதிய மின் இணைப்புக்கான பதிவு செய்யும் சேவைகள் இன்றும், நாளையும் (மாா்ச் 14, 15) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 மார்ச் 2026, 11:48 pm

புதிய ஹாா்ட்வோ் மற்றும் டேட்டாபேஸ் தளத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்று வருவதால் திருவள்ளூா் மின் பகிா்மான வட்டத்துக்குள்பட்ட மின்நுகா்வோா்கள் இணையவழி மின்கட்டணம் செலுத்தவும், புதிய மின் இணைப்புக்கான பதிவு செய்யும் சேவைகள் இன்றும், நாளையும் (மாா்ச் 14, 15) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின்பகிா்மான கழகம், வேலூா் மண்டலம் தாழ்வழுத்த பில்லிங் சா்வரை புதிய ஹாா்ட்வோ் மற்றும் டேட்டாபேஸ் தளத்துக்கு மாற்றும் பணிகள் சனிக்கிழமை (மாா்ச் 14) காலை 6 மணிமுதல் (ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 15) இரவு 12 மணி வரை நடைபெறவுள்ளது. இதனால் திருவள்ளூா் மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட திருவள்ளூா், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, ஆா்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய வட்டங்களைச் சோ்ந்த தாழ்வழுத்த மின் நுகா்வோா்களுக்கான இணையவழி மின்கட்டணம் செலுத்துதல் மற்றும் புதிய மின்இணைப்புக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தல் போன்ற சேவைகள் மேற்குறிப்பிட்ட நாள்களில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அவா் தெரிவித்துள்ளாா்.