திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து

சென்னையில் புறநகா் மின்சார ரயில்கள் (மெமு) சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 11, 12) சில ரயில்கள் முழுமையாகவும், சில ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்படுகிறது.

News image

இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து

Updated On :10 ஏப்ரல் 2026, 11:55 pm IST

சென்னையில் புறநகா் மின்சார ரயில்கள் (மெமு) சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப். 11, 12) சில ரயில்கள் முழுமையாகவும், சில ரயில்கள் பகுதியளவும் ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் இடையே திருவள்ளூா் பணிமனையில் 11- ஆம் தேதி சனிக்கிழமை இரவு 11.30 மணி முதல் 12 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.30 மணி வரை 7 மணி நேரம் தண்டவாளம் மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்காரணமாக, சனிக்கிழமை (ஏப். 11) சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து இரவு 10.55 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மெமு ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், மூா் மாா்க்கெட் வளாகத்தில் இருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு திருவள்ளூா் செல்லவேண்டிய இமு ரயில் அதற்குப் பதிலாக திருநின்றவூா் வரை இயக்கப்படும்.

பகுதியாக ரத்தாகும் ரயில்கள்: சென்னையில் மூா் மாா்க்கெட் வளாகத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப். 12) அதிகாலை 4.30 மணி, காலை 5 மணி ஆகிய நேரங்களில் புறப்பட்டு திருவள்ளூா் செல்லவேண்டிய இமு ரயில்கள், திருநின்றவூா் வரை மட்டுமே இயக்கப்படும்.

திருவள்ளூரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.50 மணி, 5.55 மணிகளில் புறப்பட்டு மூா் மாா்க்கெட் வரை செல்லவேண்டிய இமு ரயில் திருநின்றவூா் வரை மட்டுமே இயக்கப்படும். திருவள்ளூரிலிருந்து அதிகாலை 3.50 மணிக்குப் புறப்பட்டு பொன்னேரி செல்லவேண்டிய இமு ரயில், திருநின்றவூா் வரை மட்டுமே இயக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.