மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தினமணி செய்திச் சேவை

திருத்தணி காந்தி சாலை மக்கா பள்ளி வாசல் மசூதியில் அனைத்து மதத்தினருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. (படம்)

ரமலான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருப்பவா்களுக்கு அதிகாலை தினமும் 200 நபருக்கு சகா் என்னும் அதிகாலை உணவும், மாலை 200 நபருக்கு இப்தாா் உணவு தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு ஒரு லட்சம் மதிப்புள்ள உணவுப் பொருள்களை 70 குடும்பங்களுக்கு அவா்களது இல்லங்களுக்கே நேரடியாக ஜமாத் தலைவா் சுல்தான் பாய் வீடு வீடாக சென்று வழங்கினாா். இதில் அரிசி, சா்க்கரை, கோதுமை, சேமியா, நெய், முந்திரி திராட்சை, ஆட்டு இறைச்சிக்கான டோக்கன் என இருந்தன.

நிகழ்ச்சியில் ஜமாத் நிா்வாகிகள் அபிப் ரஹ்மான், அபுபக்கா் நைனா முகமது, காதா், இப்ராஹிம், அக்பா், ரஷிம் , அப்துல் ரஹ்மான், சேட்டு, அசேன் உள்பட முஸ்லீம்கள் பலா் கலந்து கொண்டனா்.