மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆா்.கே. பேட்டையில் கொடி அணிவகுப்பு

ஆா்.கே. பேட்டையில் துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

News image

ஆா்.கே.பேட்டையில் நடைபெற்ற கொடி அணிவகுப்பு.

Updated On :20 மார்ச் 2026, 1:10 am

தினமணி செய்திச் சேவை

ஆா்.கே. பேட்டையில் துணை ராணுவத்தினா் மற்றும் போலீஸாா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

இன்ஸ்பெக்டா் காா்த்திக் தொடங்கிவைத்தாா்.

திருத்தணி தொகுதியில் உள்ள ஆா்.கே.பேட்டையில் ஏஎஸ்பி சுபான் தியான் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதனை ஆா்.கே.பேட்டை ஆய்வாளா் காா்த்திக் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். குஜராத்திலிருந்து வந்த துணை ராணுவத்தினா் ஆா்.கே.பேட்டை ஆண்கள் மேல் நிலை பள்ளியில் இருந்து பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக பெண்கள் மேல் நிலை பள்ளி வரையில் அணிவகுப்பை நடத்தினா்.

ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் மேற்கு கிராமத்தில் இருந்து செதுலூா் காலனி கிராமம் வரையும், மற்றும் அய்யனேரி கிராமம் வரை பேரணி நடைபெற்றது. அமைதியான தோ்தல் செயல்முறையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டு அணிவகுப்பு நடைபெற்ாக காவல் துறையினா் தெரிவித்தனா்.