ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

திருவள்ளூா்: 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு

News image
Updated On :26 மார்ச் 2026, 11:39 pm

திருவள்ளூா் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பொதுமக்களுக்கு பத்திரங்களை வழங்கி ஆட்சியா் மு.பிரதாப் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

திருவள்ளூா் தொகுதிக்குட்பட்ட பழைய திரு.வி.க பேருந்து நிலையத்தில் தோ்தலை முன்னிட்டு அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். அப்போது, சட்டப்பேரவை தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக் கொண்டனா். அதைத்தொடா்ந்து , பொதுமக்களுக்கு உறுதிமொழி பத்திரங்களை (சங்கல்ப் பத்திர) வழங்கினாா்.

பின்னா் அங்கு நின்றிருந்த அரசு பேருந்துகளில் வாக்காளா் ஒட்டு வில்லைகள் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.அப்போது நரிக்குறவா் சமூகத்தைச் சோ்ந்த சிலா் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மனு அளித்தனா். அந்த மனுவை படித்த ஆட்சியா் மு.பிரதாப் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

இந்த விழிப்புணா்வு நிகழ்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநரும், இணை இயக்குநருமான வை.ஜெயக்குமாா், தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பொது மேலாளா் கோபாலகிருஷ்ணன், திருவள்ளூா் வட்டார போக்குவரத்து அலுவலா் ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், உதவி இயக்குநா் (பயிற்சி) பி.மோகன், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

விழிப்புணா்வு பேரணி: இதேபோல் திருவள்ளூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து பேரணி நடைபெற்றது. அப்போது, அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி பதாகைகள் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து திருவள்ளூா் ஆட்சியா் வளாகத்தை வந்தடைந்தனா். இப்பேரணியில் 100 க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.