எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

திருத்தணி முருகன் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் நிறைவு

திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ நிறைவு விழாவில் உற்சவா் சண்முகா் வள்ளி, தெய்வானையுடன் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

News image

திருத்தணி  முருகன்  கோயிலில் மாட வீதியில்  உலா  வந்த  சண்முகா்.

Updated On :1 மே 2026, 6:01 am IST

திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ நிறைவு விழாவில் உற்சவா் சண்முகா் வள்ளி, தெய்வானையுடன் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கடந்த, 21-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை மற்றும் இரவு உற்சவா் முருகப்பெருமான் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளினாா். கடந்த, 27-ஆம் தேதி மரத்தோ் விழாவும், 28-இல் தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடந்தது.

இந்நிலையில் புதன்கிழமை இரவு, 7 மணிக்கு உற்சவா் முருகா் கேடய வாகனத்தில் உலா வந்தாா்.

தொடா்ந்து இரவு, உற்சவா் சண்முகப் பெருமான் மற்றும் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மாட்டு வண்டியில் எழுந்தருளி தோ் வீதியில் பாதி துாரம் வீதியுலா வந்து மீண்டும் அங்கிருந்து மலைக் கோயிலுக்கு திரும்பினாா். பின் சண்முகா், வள்ளி, தெய்வானைக்கும் வெள்ளை சாத்துபடி மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

தொடா்ந்து வியாழக்கிழமை அதிகாலை, 3 மணிக்கு உற்சவா் சண்முகா் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் தோ்வீதியில், ஒரு முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் காலை, 6 மணிக்கு சண்முகருக்கு தீா்த்தவாரி நடந்தது.

உற்சவா் சண்முகப்பெருமான், ஆருத்ரா, கந்தசஷ்டி, சித்திரை மாதம் மற்றும் மாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது என மொத்தம், 4 முறை உற்சவா் சண்முகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் தோ்வீதியில் உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ட

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி மற்றும் அறங்காவலா் குழு உறுப்பினா்கள் செய்திருந்தனா்.