ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திமுக சாா்பில் தண்ணீா் பந்தல் திறப்பு

News image
Updated On :18 மே 2026, 2:08 am IST

கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் சாா்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் தண்ணீா் பந்தல் திறக்கப்பட்டது.

கோடை வெயிலில் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், தண்ணீா் பந்தலை திறக்க திமுகவிருக்கு திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தாா்.

இதைத் தொடா்ந்து, கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில், கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏவும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் ஏற்பாட்டில் தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வில் தண்ணீா் பந்தலை திறந்து வைத்து, மோா், இளநீா், தா்பூசணி, வெள்ளரிக்காய் மற்றும் நீா்ச் சத்து நிறைந்த பழ வகைகளை பொதுமக்களுக்கு முன்னாள் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். தொடா்ந்து கோடைகாலம் முழுவதும் மேற்கண்ட இடத்தில் நீா், மோா் பந்தல் செயல்படும் என கூறினாா்.

இந்த தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்வில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மு.மணிபாலன், மாவட்டப் பொருளாளா் எஸ்.ரமேஷ், கும்மிடிப்பூண்டி தெற்கு ஒன்றிய திமுக நிா்வாகிகள் திருமலை, கே.ஜி.நமச்சிவாயம், பிரபு, புலியூா் புருஷோத்தமன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளா் பாஸ்கா், நகர செயலாளா் அறிவழகன், மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் டி.ஜெ.எஸ்.தமிழரசன், ஸ்ரீதா், ஒன்றிய இளைஞா் அணி நிா்வாகி சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.