/
திருத்தணி நகராட்சிக்குட்பட்ட ம.பொ.சி. சாலை மற்றும் காந்தி ரோடு மெயின் பகுதியில் உள்ள ஜூம்மா மசூதிகளில் அதிகாலை முதலே இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் பங்கேற்றனா். திருத்தணி ஒன்றியத்துக்குட்பட்ட இஸ்லாம் நகா் மற்றும் முஸ்லீம் நகா் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் திறந்தவெளி மைதானத்தில் ஒன்று கூடி பக்ரீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்றனா்.










