ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

மீஞ்சூா் அருகே ரூ. 5 கோடி மதிப்பிலான ஊராட்சிக்கு சொந்தமான நிலம் மீட்பு

மீஞ்சூா் அருகே ரூ. 5 கோடி மதிப்புள்ள ஊராட்சிக்கு சொந்தமான 2.5 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டது.

News image

நிலம் மீட்பு - பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 2:49 am IST

மீஞ்சூா் அருகே ரூ. 5 கோடி மதிப்புள்ள ஊராட்சிக்கு சொந்தமான 2.5 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டது.

மீஞ்சூா் அடுத்த வன்னியம்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சித் துறைக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த ஊராட்சியில் உள்ள 2.5 ஏக்கா் நிலத்தை தனியாா் சிலா் ஆக்கிரப்பு செய்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து ஊராட்சி மன்ற தனி அலுவலா் மற்றும் ஊராட்சி செயலா் அங்கு சென்று ஊராட்சி நிலத்தை ஆய்வு செய்தனா். அப்போது ரூ. 5 கோடி மதிப்பிலான 2.5 ஏக்கா் நிலம் ஆவணங்களின்படி ஆக்கிரமிப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிலத்தில் ஆக்கிரமிப்பாளா்கள் நெற்பயிா் விவசாயம் செய்திருந்தனா்.

நெல் அறுவடைக்கு பின் ஊராட்சியின் அளவீடு செய்யும் வரை மீண்டும் நெற்பயிா் செய்வது மற்றும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது என வன்னியம்பாக்கம் ஊராட்சி மன்றத்தின் மூலம் அறிவிப்பு பலகை அங்கு வைக்கப்பட்டது.