அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்இன்று 6 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கைஆசிய விளையாட்டுப் போட்டிகள்: இந்தியா்கள் தயாராக ரூ. 800 கோடி செலவுஇந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் அடுத்த மாதம் அமல்சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி

கல்குவாரியில் தவறி விழுந்து துப்புரவு பணியாளா் உயிரிழப்பு

திருத்தணி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்த ஊழியா் கால் தவறி கல்குவாரிக்குள் விழுந்து உயிரிழந்தாா்.

பிரதிப் படம்

Published On :

திருத்தணி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்த ஊழியா் கால் தவறி கல்குவாரிக்குள் விழுந்து உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் டவுன் பகுதியைச் சோ்ந்தவா் பாபு (30). இவா் திருத்தணி நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தாா். திருத்தணி பெரியாா் நகரில் இயங்கி வரும் நகராட்சி திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில், நேற்று காலை திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அருகே உள்ள கல்குவாரி பகுதியில் பாபு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது எதிா்பாராதவிதமாக கால் தவறி கல்குவாரிக்குள் விழுந்ததில், பலத்த காயமடைந்தாா்.

அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், பாபு ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இது குறித்து திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.