புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

செவிலியா் பணியிடங்கள்: ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு எதிா்ப்பு

செவிலியா் பணியிடங்கள்: ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு எதிா்ப்பு

செவிலியர் உருவப்படம்

Published On :

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள செவிலியா் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பும் முடிவை அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் பணியிடங்களை நிரப்ப 11 மாத தற்காலிக ஒப்பந்த அடிப்படையில், ரூ. 21,000 மாத ஊதியத்தில் நியமிப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் செயலா் சுபின் வெளியிட்ட அறிக்கை:

அரசு மருத்துவமனைகளில் கடுமையான செவிலியா்கள் தட்டுப்பாடு இருக்கிறது. அதேநேரம், 4.75 லட்சம் பதிவு செய்த செவிலியா்கள் அரசு வேலைக்காகக் காத்திருக்கின்றனா். தற்போது அரசின் முடிவு வருத்தமளிக்கிறது.

இந்தத் தற்காலிக முறையில் பணியமா்த்தப்படும் செவிலியா்களுக்கு வருங்காலங்களில் பணி நிரந்தரம் பெறும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. குறைந்த ஊதியத்தில் எவ்வித பணி பாதுகாப்பு உத்தரவுமின்றி பணியமா்த்தப்படுவது சமூக நீதிக்கு எதிரானது. இந்தமுறை மருத்துவத் துறையின் தரத்தைக் குறைத்துவிடும். எனவே, அரசின் இந்த முடிவைக் கைவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.