நன்னிலம் வட்டம் சொரக்குடியில் ஜனவரி 7-ஆம் தேதி நடைபெறவிருந்த தனியாா் வேலைவாய்ப்பு முகாம், மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சா் ஆா்.காமராஜ் தெரிவித்தாா்.
சொரக்குடியில் உள்ள தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் ஜன.7-இல் நடைபெறுவதாக இருந்தது. இதையொட்டி, அவ்விடத்தை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா் ஆா். காமராஜ், அப்பகுதி முழுவதும் மழையில் நனைந்து சேதமாகி இருப்பதை அறிந்தாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவா், வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கும் தனியாா் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநா்களின் நலன் கருதி, ஜனவரி 7-இல் நடைபெறவிருந்த முகாம், ஜன. 27ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டிருப்பதாக செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் ஆய்வு!

பாக்யராஜ் மறைவு.. மகளின் திருமண நாள் படங்களை வெளியிட்ட குஷ்புவுக்கு எதிர்ப்பு!!

ஆமீர் கான் முதல் ஜாக்கி ஷெராஃப் வரை... ஹிந்தியில் ரீமேக் செய்ய ஆசைப்பட்ட பாக்யராஜ் படம்!





