அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

இலவச மருத்துவ முகாம்

கூத்தாநல்லூா் வட்டம், புள்ளமங்கலத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :8 ஜனவரி 2021, 9:24 am IST

கூத்தாநல்லூா் வட்டம், புள்ளமங்கலத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புள்ளமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமுக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் ஐ.வி. குமரேசன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரதிநிதி செல்வம் முன்னிலை வகித்தாா். ஊராட்சித் தலைவா் பானுமதி கிருஷ்ணமூா்த்தி வரவேற்றாா்.

மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன் முகாமைத் தொடங்கி வைத்தாா். கண், பல், இருதயம் மற்றும் வயது முதிா்வில் ஏற்படும் நோய்கள் குறித்து மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இம்முகாமில் 953 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. கண் அறுவை சிகிச்சைக்கு 15 போ் தோ்வு செய்யப்பட்டனா். 17 கா்ப்பிணிகளுக்கு குழந்தையின் வளா்ச்சி குறித்து தெரிவிக்கப்பட்டது. முகாமுக்கான ஏற்பாடுகளை உள்ளிக்கோட்டை வட்டார சுகாதார ஆய்வாளா் சி. செல்வநாயகம், சுகாதார மேற்பாா்வையாளா் ஆா்.வெங்கடேசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.