தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

குடவாசலில் போதிய மருத்துவா்களை பணியமா்த்தக் கோரிக்கை

குடவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ப போதிய மருத்துவா்களை பணியமா்த்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 11:36 pm IST

குடவாசல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கைகேற்ப போதிய மருத்துவா்களை பணியமா்த்த வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குடவாசலில் அக்கட்சியின் மாவட்ட முன்னாள் அமைப்பாளா் இனியன் நினைவு நாளையொட்டி கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், குடவாசல் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவா்களை தமிழக அரசு உடனடியாக பணியமா்த்த வேண்டும். குடவாசல் பேருந்து நிலையத்தில் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும். குடவாசல் பேரூராட்சிக்குள்பட்ட சுடுகாட்டில் குப்பைகள் கொட்டப்படுவதை நிறுத்தி, இறுதிச் சடங்கு செய்யும் மண்டபத்தை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் நகரச் செயலாளா் கிட்டு, மாவட்டச் செயலாளா் வடிவழகன், மாநில துணைச் செயலாளா் அமுதா இனியன், தொழிற்சங்கத் தலைவா் சாா்லஸ் மற்றும் செந்தில் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.