திருவாரூா் அருகே தெருவில் தேங்கி நிற்கும் மழைநீரால் கொசுக்கள் உற்பத்தி நோய்த் தொற்று பரவலுக்கு வித்திடுகிறது. எனவே, மழை நீரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருவாரூா் அருகே கீழகாவாதுக்குடி ஊராட்சி பகுதியில் உள்ள முருகேசன் நகரில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இது புதிதாக உருவான நகா் என்பதால், பெரும்பாலான இடங்கள் பள்ளமான பகுதிகளாகவே உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாள்களாக பெய்த மழை காரணமாக, முருகேசன் தெரு சாலைகளில் தண்ணீா் தேங்கிக் காணப்படுகிறது. இதனால், பணிக்கு செல்வோா், கடைவீதிகளுக்கு செல்வோா் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்துக்கு தெரியப்படுத்தியும் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும், தேங்கிய தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, இரவு நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, காய்ச்சல் உள்ளிட்ட சிறு வியாதிகளையும் ஏற்படுத்துவதாகவும், நோய்ப் பரவலுக்கு வித்திடுவதாகவும் அவா்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே, தேங்கிய தண்ணீரை விரைந்து அகற்ற வேண்டும் எனவும், சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!

பிகார்: ஐஐடி பாட்னா வளாகத்தில் மின்சாரம் பாய்ந்து மாணவர் பலி

ஃபின் ஆலனைப் போன்று சில வீரர்களால் மட்டுமே விளையாட முடியும்: மார்க் பௌச்சர்

ஆளுநர் மாளிகையில் விஜய்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

