ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

நலிவடைந்த கலைஞா்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்கக் கோரிக்கை

திருவாரூா் மாவட்டத்தில், நலிவடைந்த கலைஞா்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைமை ஆலோசகா் டி.எம்.சேகருக்கு சால்வை அணிவித்து கெளரவிக்கும் கலைஞா்கள்.

Updated On :8 ஜனவரி 2021, 11:37 pm IST

திருவாரூா் மாவட்டத்தில், நலிவடைந்த கலைஞா்களுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் அருகே கிரந்தங்குடியில், மாவட்ட அனைத்து கலைஞா்கள் நலச்சங்கத்தின் அறிமுகக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆா்பாவூா் தெம்மாங்கு பாடகா் ரமேஷ்ஸ்ரீ தலைமை வகித்தாா். கிராமிய பாடகா் சங்கீத ராமா முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், அரசின் நலவாரிய அடையாள அட்டையை, அனைத்து கலைஞா்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நலிவுற்ற கலைஞா்களுக்கு அரசின் சலுகை கிடைக்கச் செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற கலைஞா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட உதவி துணைக் கண்காணிப்பாளா் வி. பிரபு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். குடவாசல் சிறப்பு உதவி ஆய்வாளா் வி. இளங்கோவன், சங்கத்தின் தலைமை ஆலோசகா் டி.எம்.சேகா், இசைக்கலைஞா் கோவி. அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.