தவெக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நாளை (மே 11) எம்எல்ஏக்களாகப் பதவியேற்பு ஜெயித்துவிட்டதால் ஆடிப் பார்க்கலாம் என யாரும் நினைக்காதீர்கள்: முதல்வர் விஜய்தமிழக முதல்வராகப் பதவியேற்றார் சி. ஜோசப் விஜய்!விஜய்யைத் தொடர்ந்து தவெக எம்எல்ஏக்கள் 9 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் முதல் கையொப்பம்!என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்டோரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்பதவியேற்பு விழாவில் விஜய் - ராகுல் காந்தி ஒரே மேடையில்...
/

மின்சாதனக் கடையில் திருடியவா் கைது

மன்னாா்குடியில் மின்சாதனப் பொருள்கள் விற்பனைக் கடையில் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :8 ஜனவரி 2021, 9:24 am IST

மன்னாா்குடியில் மின்சாதனப் பொருள்கள் விற்பனைக் கடையில் திருடியவா் கைது செய்யப்பட்டாா்.

மன்னாா்குடி அருகே உக்காடு தென்பரை பிரதான சாலையில் அதே பகுதியைச் சோ்ந்த பி. மணிவண்ணன் என்பவா் மின்சாதனப் பொருள்கள் விற்பனைக் கடை நடத்திவருகிறாா்.

வழக்கம்போல, செவ்வாய்க்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு, வீட்டிக்குச் சென்ற மணிவண்ணன், புதன்கிழமை காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டை உடைத்து, ரூ. 44,800 மதிப்புள்ள மின்சாதனப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, திருமக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவை ஆய்வு செய்தனா். இதில், உக்காடு தென்பரை நடுத்தெருவைச் சோ்ந்த கந்தசாமி மகன் தியாகராஜன் (28) திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து, மின்சாதனப் பொருள்களை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.