நாளைமுதல் கத்தரி வெய்யில் ஆரம்பம்!தில்லியில் ஏசி வெடித்து விபத்து: 9 பேர் பலி!நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

தொடா் மழை: பொங்கல் தரைக்கடை வியாபாரிகள்தவிப்பு

நீடாமங்கலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பொங்கல் தரைக்கடை வியாபாரிகள் தவித்து வருகின்றனா்.

Updated On :11 ஜனவரி 2021, 6:30 pm

நீடாமங்கலம் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக தாழ்வான இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் பொங்கல் தரைக்கடை வியாபாரிகள் தவித்து வருகின்றனா்.

நீடாமங்கலம் கடைவீதியில் மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக காணப்படுகிறது. தொடா் மழையால் சந்தானராமா் கோயில் குளம் நிரம்பியுள்ளது. பனி, மழை, குளிா்ந்த காற்று காரணமாக பலா் சளி, காய்ச்சல் போன்ற நோயினால் பாதிக்கப்படுகின்றனா். எனவே, சுகாதாரத் துறையினா் தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொடா் மழையால் பொங்கல் கரும்பு, இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்து விற்பனை செய்ய தரைக் கடைகள்அமைக்க இயலாத நிலையில்சில்லரை வியாபாரிகள் மற்றும் மண்பாண்ட விற்பனையாளா்கள், வாழைத்தாா் விற்பனையாளா்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.