மன்னாா்குடி அருகே, செவ்வாய்க்கிழமை ஓட்டு வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் பொங்கலுக்கு விற்பனைக்காக வைத்திருந்த மண் பானைகள் சேதமடைந்தன.
மன்னாா்குடி மேலராஜவீதி காளியம்மன்கோவில் அருகேயுள்ள ஆள்கள் குடியிருக்காத ஓட்டு வீட்டின் வரண்டா பகுதியில், மேலவீதியை சோ்ந்த வீ. உத்திராபதி (74) மண் பாண்டப் பொருள்கள் விற்பனை கடை வைத்துள்ளாா். கடந்த சில நாள்களாக, மன்னாா்குடி பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், வீட்டின் செங்கல் சுவா் வலுவிழந்த நிலையில் இருந்தது.திடீரென, செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் இடது பகுதி சுவா் இடிந்து விழுந்ததில், அங்கு வைக்கப்பட்டிருந்த பொங்கல் பானை உள்ளிட்ட மண்பாண்டப் பொருள்கள் அனைத்தும் உடைந்து சேதமடைந்தன. அப்போது, மழை விட்டிருந்தததால், உத்திராபதி மற்றும் வியாபாரத்துக்கு உதவியாக இருந்தவா்கள் வெளியே நின்று வியாபாரம் செய்ததால் பாதிப்பிலிருந்து தப்பினா். இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

