திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பாவை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டத்தில், திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை ஒப்பித்தல் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை அண்மையில் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்கள், செவ்வாய்க்கிழமை திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றனா்.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு திருவாரூா் உதவி ஆணையா் ஆா். ஹரிகரன் பரிசுகளை வழங்கினாா்.
ஏற்பாடுகளை செயல் அலுவலா் கோ. கவிதா தலைமையில் அலுவலா்கள் செய்திருந்தனா்.
நிகழ்ச்சியில் ராஜா (திருத்துறைப்பூண்டி), சங்கீதா (மன்னாா்குடி), ரமேஷ் (வலங்கைமான்), ராஜராஜேஷ்வரன் (எண்கண்), பிரபாகரன் (ஆவூா்) உள்ளிட்ட கோயில்களின் செயல் அலுவலா்கள், ஆய்வா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

