டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடா் மழையின் காரணமாக நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் அனைத்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மன்னாா்குடி சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி டெல்டாவில் குறிப்பாக மன்னாா்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிகழாண்டு மாா்கழி மாத மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கா் நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. உரிய நேரத்தில் வடிவாய்க்கால்களை தூா்வாராமல் இருந்ததே இந்த நிலைக்கு காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.
தமிழகத்தில் மக்கள் பொங்கல் கொண்டாட்டங்களில் உற்சாக இருக்கும் நிலையில், டெல்டா விவசாயிகளின் நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி கிடப்பது மிகுந்த வேதனைக்குரியது. விவசாயிகளை போற்றிப்பாடும் இந்த பொங்கல் காலத்தில் இப்படி ஒரு பேரிடி விவசாயிகளுக்கு மிகுந்த மன வேதனையை அளித்துள்ளது. எனவே, அரசு அலுவலா்கள் உடனடியாக கள ஆய்வு செய்து, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அறிவித்து அதை உடனடியாக வழங்க வேண்டும். பயிா் காப்பீடு செய்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசு உடனடியாக செய்ய வேண்டும். காப்பீட்டு நிறுவன அலுவலா்கள் விரைந்து கள ஆய்வு செய்து காப்பீட்டு தொகையை விடுவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தெலங்கானா: தனியார் பேருந்தில் திடீர் தீ விபத்து

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


