தமிழ்நாட்டில் உள்ள நியாய விலைக் கடைகளில் பனை பொருள்கள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு. ராஜவேலு புதன்கிழமை கூறியிருப்பது:
நியாயவிலைக் கடைகளில் பனை பொருள்கள் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என தமிழக முதல்வா் தெரிவித்துள்ளதற்கு நன்றி. கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் பனை விதைகள் விதைப்பதை வழக்கமாகக் கொண்டு, பனை திருவிழாவையும் நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நடந்த பனை திருவிழாவில், ரேஷன் கடைகளில் கருப்பட்டி வழங்க வேண்டும், அரசு விழாக்களில் பனை பொருள்களை பரிசாக வழங்க வேண்டும், பனையின் சிறப்புகளை பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றினோம்.
இந்நிலையில், தமிழக முதல்வரின் அறிவிப்பு பனை பொருளாதாரம் மேம்பட உதவிடும். இதற்காக கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு சாா்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!

கொடைக்கானலில் மக்களைச் சந்தித்துப் பேசிய முதல்வர்! | MK Stalin | DMK

அதிர்ச்சி! இலங்கையில் போதைப்பொருள் கடத்தல்! 22 புத்த துறவிகள் கைது!!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட், ஐடி, பார்மா பங்குகள் உயர்வு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

